திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில், தினமும் காலை, மாலையில், உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று நடந்தது. அதிகாலையில் பக்தர்கள் குவிந்து, பெருமாளை சேவித்தனர். உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கருட வாகனத்தில், நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, வரும் 23ம் தேதி, காலை 7:00 மணிக்கு தொடங்குகிறது.