திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் ஜி.எஸ்.டி., சாலையில் பிரபல நகராட்சியாகவும், வருவாய் கோட்டமாகவும் விளங்குகிறது.
இங்கு அரசு மருத்துவமனை, நீதிமன்றம், ஏரிகாத்தான் ராமர் கோவில் ஆகியவை உள்ளன.
அதேபோல, திருக்கழுக்குன்றத்தில் சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக மையமாக விளங்குகிறது.
அதேபோல, ஆன்மீக நகரமாகவும், சட்ட சபை தொகுதி தலைமையிடமாகவும், நுாற்றுக்காணக்கான தொழில் நிறுவனங்களும் கொண்டதாக, திருப்போரூர் விளங்குகிறது.
சிறப்புபெற்ற இப்பிரதான மூன்று ஆன்மீக நகரங்களை இணைக்கும் விதத்தில், நல்ல சாலை வசதியும் உள்ளது.
இச்சாலை வழியே நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால், செங்கல்பட்டு சென்று, பின் மதுராந்தகத்திற்கோ, திருப்போரூருக்கோ செல்ல வேண்டியுள்ளது.
இந்த வழித்தடத்தில் நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தினால், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம மக்கள் பயனடைவர்.
எனவே, முக்கியத்துவமான இச்சாலையில், நேரடி பேருந்து சேவை துவங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.