கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஈய்யனுாரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜேஷ்,32. இவரை கடந்த 17 ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன், சந்தோஷ், விக்னேஷ், சின்னசாமி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வெங்கடேசன் உட்பட 4 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.