திருப்பூர்:பிளாட்பார்ம் விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு பணி நடப்பதால், கூட்ஸ்ெஷட்டில் சரக்கு ரயில் நிற்குமிடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் சீரமைப்பு பணியை தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவினர் துவக்கியுள்ளனர். பல ஆண்டுகள் கடந்த கற்கள், மணல் முற்றிலும் பெயர்த்தெடுக்கப்பட்டு, புதிதாக கம்பி கட்டி கான்கிரீட் சுவர் போன்ற அமைப்புடன் பிளாட்பார்ம் அமைக்கப்பட உள்ளது.
வழக்கமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு ரயில்கள், ஈரோடு - கோவை மெயின் லைனில் இருந்து, கூட்ஸ்ெஷட் பிளாட்பார்முக்கு செல்லும் வகையில் சிக்னல் வழங்கப்படும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சரக்கு ரயில்கள் வரும் போது, கூட்ஸ்ெஷட்டில் உள்ள மாற்று தண்டவாளத்திலும் சரக்கு ரயில் நிறுத்தப்படும்.
காலதாமதம்
சரக்குடன் ரயில்பெட்டிகள் நிற்பதை தவிர்க்க, ரயில் பிளாட்பார்ம் வந்த, 24 முதல், 36 மணி நேரத்தில், சரக்குகளை இறக்கி, செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அனுப்பப்படும். தற்போது, கூட்ஸ்ெஷட் பிளாட்பார்ம் கட்டமைப்பு பணி நடப்பதால், ரயில் நிறுத்தம், சரக்குகளை இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
ஒரே நேரத்தில், அனைத்து பெட்டிகளில் இருந்து, சரக்கு இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மெயின் டிராக்கில் வரும் ரயில்களை பிளாட்பார்ம்மை ஒட்டியுள்ள கூட்ஸ்ெஷட் டிராக்கில் நிறுத்த முடியாமல், மாற்று தண்டவாளத்தில் நிறுத்தப்படுகிறது.
பணி நடக்கும் இடத்துக்கு ரயில் முன்னேறி செல்லாமல் இருக்க தடுப்புகள் நடப்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் ஒரு பகுதியை (பாதி பெட்டிகளை பிரித்து) மாற்று தண்டவாளத்திலும், மீதியை பிளாட்பார்ம் பணி நடக்காத இடத்திலும் நிறுத்தி வைக்கின்றனர். லாரியை நிறுத்தி சரக்கு இருக்க ஏதுவான இடத்தில் பெட்டிகள் மாற்றி நிறுத்தப்படுகிறது.