கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் நிலத்தகராறில் தாக்கிக்கொண்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சின்னசேலம், கீழ்வெற்றிலைக்காரர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன்,67. இவரது தம்பி சக்கரவர்த்தி. இருவருக்கும் நிலப் பிரச்னை உள்ளது. கடந்த 14ம் தேதி, பிரச்னைக்குரிய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற கோவிந்தனை, சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பரின் மகன் தேவராஜ் ஆகியோர் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின்பேரில், சக்கரவர்த்தி, தேவராஜ் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.