விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு| Case against 4 people who attacked the farmer | Dinamalar

விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Added : ஜன 19, 2023 | |
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி காட்டு கொட்டகையை சேர்ந்தவர் கண்ணன் மகன் ராமசாமி, 45; விவசாயி. இவர், கடந்த 17ம் தேதி பல்லகச்சேரி ஊருக்குள் நடந்த பொங்கல் பண்டிகை திருவிழாவை காண குடும்பத்துடன் சென்றிருந்தார்.அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரை மகன்கள் மணிகண்டன், 35; மாணிக்கம், 32;



தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி காட்டு கொட்டகையை சேர்ந்தவர் கண்ணன் மகன் ராமசாமி, 45; விவசாயி. இவர், கடந்த 17ம் தேதி பல்லகச்சேரி ஊருக்குள் நடந்த பொங்கல் பண்டிகை திருவிழாவை காண குடும்பத்துடன் சென்றிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரை மகன்கள் மணிகண்டன், 35; மாணிக்கம், 32; ஆகியோருடன் பிரச்னை ஏற்பட்டது.

அப்போது மணிகண்டன், மாணிக்கம், அஞ்சாமணி, ரங்கன் ஆகியோர் சேர்ந்து ராமசாமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், அவர்கள் நால்வர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X