மயிலம் : மயிலம் பகுதி கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
மயிலம் அடுத்த வீடூர் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வர கோவிலில், மாலை 5:00 மணிக்கு கோவில் மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, மயிலம் சுந்தர விநாயகர் கோவிலிலும் பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், செண்டூர், ஆலகிராமம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.