கிருஷ்ணராயபுரம்:பொங்கல் விளையாட்டு போட்டி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை, ஆண்டியப்ப நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 29; லாரி டிரைவரான இவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி, அப்பகுதியில் விளையாட்டு போட்டி நடத்தினார்.
அப்போது, லாலாப்பேட்டை, மாம்பலகாரத் தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பிரவீன்குமாருக்கும், விக்னேஷுக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிரவீன்குமார், நேற்று இரவு வியாசர் மடம் அருகே, விக்னேஷை வெட்டிக் கொன்றார். லாலாப்பேட்டை போலீசார் உடலை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிந்து, தப்பி ஓடிய பிரவீன்குமாரை தேடுகின்றனர்.