பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 80. சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடை வைத்திருந்த அவர், 2021ல், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில், சுந்தரத்தை கைது செய்தனர். அரியலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், சுந்தரத்துக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு சார்பில், 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும், என்றும் உத்தரவிட்டார்.