படகு மீது கப்பல் மோதல் ஒருவர் மாயம்; 2 பேர் மீட்பு| Ship Collision on Boat Kills One; 2 rescuers | Dinamalar

படகு மீது கப்பல் மோதல் ஒருவர் மாயம்; 2 பேர் மீட்பு

Added : ஜன 19, 2023 | |
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதில், கடலில் தவித்த இரு மீனவர்கள் மீட்கப்பட்டனர்; ஒருவரை காணவில்லை.துாத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயபால், 47; ஆன்டோ, 45; மேட்டுப்பட்டி ஷேக் முகமது, 40, ஆகியோர் ஜன., 17ல் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.நேற்று முன்தினம் மாலை, ஒரு கப்பல் அவர்களது படகு மீது மோதியது. இதில் மூவரும் கடலுக்குள்

துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதில், கடலில் தவித்த இரு மீனவர்கள் மீட்கப்பட்டனர்; ஒருவரை காணவில்லை.

துாத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயபால், 47; ஆன்டோ, 45; மேட்டுப்பட்டி ஷேக் முகமது, 40, ஆகியோர் ஜன., 17ல் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை, ஒரு கப்பல் அவர்களது படகு மீது மோதியது. இதில் மூவரும் கடலுக்குள் விழுந்தனர். ஜெயபால், ஆன்டோவை கொம்புத்துறை மீனவர்கள் மீட்டனர். ஷேக் முகமது என்ன ஆனார் என தெரியவில்லை.

கரை சேர்ந்த மீனவர்களின் புகாரின்படி, துாத்துக்குடி மரைன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X