கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் குடும்ப பிரச்னையில் இளம்பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி, மோரை பாதை பகுதியை சேர்ந்தவர் துறைவேலன் மனைவி இந்துமதி,24; இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த இந்துமதி நேற்று காலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.