கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தகராறில் கல்லால் தாக்கி கொண்ட இரு தரப்பை சேர்ந்த நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் வெங்கடேசன்,21; இவர் கடந்த 17 ம் தேதி தனது நண்பர் பூவரசனுடன் பைக்கில் சென்றார். கொங்கராயபாளையம் கூட்ரோடு அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த மல்லான்,38, மற்றும் அவரது நண்பர் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வெங்கடேசனை வழிமறித்து, கல்லால் தாக்கினர். வெங்கடேசனும் திருப்பி தாக்கினார்.
இரு தரப்பு புகாரின் பேரில், மல்லான், வெங்கடேசன் உட்பட நால்வர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.