மாமனார், மருமகன் மீது போலீசார் வழக்குப் பதிவு | Police registered a case against father-in-law and son-in-law | Dinamalar

மாமனார், மருமகன் மீது போலீசார் வழக்குப் பதிவு

Added : ஜன 20, 2023 | |
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் முன்விரோத தகராறில் ஈடுபட்ட மாமனார், மருமகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கல்வராயன்மலையில் உள்ள அருவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,40. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த தீர்த்தன் மகன் சேரன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.நேற்று



கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் முன்விரோத தகராறில் ஈடுபட்ட மாமனார், மருமகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கல்வராயன்மலையில் உள்ள அருவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,40. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த தீர்த்தன் மகன் சேரன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. ரமேஷ், சேரன் இருவரது தரப்பினரும் கல்லால் தாக்கி கொண்டனர். இதுகுறித்து இருவர் அளித்த புகாரின் பேரில் இருதரப்பையும் சேர்ந்த சேரன், நெடுஞ்செழியன், குபேந்திரன், ரமேஷ், கோவிந்தன், குமார், ரமேஷ் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X