பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை 21ம் தேதி தை மாத அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் பழபந்தலில் வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவையொட்டி காலை 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், காலை 7:30 மணிக்கு, நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை நடத்தப்பட்டு, மாலை 4:00 மணிக்கு, நடை திறக்கப்படுகிறது.
மாலை 6:00 மணிக்கு, நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு, ஏகாந்த சேவை நடக்கிறது.