அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்| Tirthavari Vaibhavam for Annamalai | Dinamalar

அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்

Added : ஜன 20, 2023 | கருத்துகள் (1) | |
திருக்கோவிலுார், மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் தீர்த்தவாரியில் திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.அதன்படி, நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையார்,
Tirthavari Vaibhavam for Annamalai  அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்

திருக்கோவிலுார், மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்
நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் தீர்த்தவாரியில் திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையார், நேற்று மதியம், 12:30 மணிக்கு மணலுார்பேட்டை வந்தடைந்தார்.
மணலுார்பேட்டை மாவடி விநாயகர், பிரயோக வரதராஜ பெருமாள், அகஸ்தீஸ்வரர், கெங்கையம்மன், மாரியம்மன், சித்தப்பட்டினம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் மேள தாளங்கள் முழங்க அண்ணாமலையாரை வரவேற்று, தென்பெண்ணை ஆற்றிற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி முடிந்து, சிறப்பு பந்தலில் சுவாமி எழுந்தருளினார். சிவாச்
சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை
நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X