பன்றி தொல்லை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 'டெம்பிள்' சிட்டியில் சீமைக் கருவேல மரங்கள் உள்ள பகுதியில், பன்றிகள் கூட்டம் கூட்டமாக தஞ்சமடைந்துள்ளன.
உணவுக்காக வெளியே வரும் பன்றிகள், சாலையோரம் கிடக்கும் குப்பையை கிளறுகின்றன. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகளை நாசப்படுத்துகின்றன.
சாலையின் குறுக்கே திடீரென ஓடும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, டெம்பிள் சிட்டியில், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு, விபத்து ஏற்படுத்தி வரும் பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொது மக்கள், காஞ்சிபுரம்.