சென்னை:தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கும்மிடிப்பூண்டி யார்டில், ஜன., 22ம் தேதி இரவு 11:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:20 மணி வரை, ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே, 22ம் தேதி இரவு 10:45 மணி ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே, 22ம் தேதி இரவு 9:55 மணி ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 22ம் தேதி இரவு 11:20 மணி ரயில், பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும்
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே, 23ம் தேதி அதிகாலை 3:50 மணி ரயில், பொன்னேரியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.