உடுமலை;உடுமலை இந்திராநகர் வெற்றிவேல்நகர் வெற்றி விநாயகர் கோவிலில், கலச பிரதிஷ்டை விழா வரும், 23ம் தேதி நடக்கிறது.
உடுமலை அருகே இந்திராநகர், வெற்றிவேல் நகரில், வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில், கலச பிரதிஷ்டை விழாவையொட்டி, நாளை, (22ம் தேதி) காலை, 9:00 மணிக்கு திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். இரவு, 8:30 மணிக்கு வாஸ்து பூஜை நடைபெறுகிறது.
வரும், 23ம் தேதி காலை, 5:30 மணி முதல், 7:00 மணி வரை, கணபதி ஹோமமும், காலை, 7:30 மணிக்கு, கலச பிரதிஷ்டை மற்றும் கலச பூஜை நடக்கிறது.
காலை, 8:00 மணிக்கு, அபிேஷகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறுகிறது. இரவு, 7:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியில், இந்திராநகர், வெற்றிவேல் நகர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.