பலதார மண வழக்கு விரைவில் புதிய அமர்வு

Updated : ஜன 20, 2023 | Added : ஜன 20, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி,-முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள பலதார திருமணத்துக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட வழக்கை விசாரிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய புதிய அரசியல் சாசன அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. முஸ்லிம்களிடையே பலதார மணம் நடைமுறையில் உள்ளது. இதன்படி முஸ்லிம் ஆண், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். 'இந்த நடைமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி,-முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள பலதார திருமணத்துக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட வழக்கை விசாரிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய புதிய அரசியல் சாசன அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.



latest tamil news


முஸ்லிம்களிடையே பலதார மணம் நடைமுறையில் உள்ளது. இதன்படி முஸ்லிம் ஆண், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். 'இந்த நடைமுறை சட்டப்படி செல்லாது' என, அறிவிக்கும்படி, அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து விசாரிக்க, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஹேமந்த் குப்தா, சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ், சுதான்ஷு தலியா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், இந்திரா பானர்ஜி, ஹேமந்த் குப்தா ஆகிய இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்று உள்ளதை அடுத்து, இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வை அமைக்கும்படி, மனுதாரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இது குறித்து நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'இது முக்கியமான வழக்கு. இதை விசாரிக்கும் புதிய அமர்வு விரைவில் அறிவிக்கப்படும்' என தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

21-ஜன-202308:02:19 IST Report Abuse
பேசும் தமிழன் நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரட்சினையாக உள்ளதை கருத்தில் கொண்டு...யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது .....அப்படி செய்வது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஜன-202305:50:11 IST Report Abuse
Kasimani Baskaran பொது சிவில் சட்டம்தான் இதற்கு நல்ல தீர்வு.
Rate this:
Cancel
21-ஜன-202304:07:38 IST Report Abuse
அப்புசாமி வழங்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X