சாத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே சிவசங்குபட்டியில் ஜன., 14 ல் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திப்கோல் 21, ராம்பால்ஆதிவாசி 27, ஆகியோர் நேற்று இறந்தனர்.
சிவசங்கு பட்டியில் ஏ.வி.எம்., பட்டாசு ஆலையில் இந்த வெடி விபத்து நடந்தது. இதில் மூவர் காயம் அடைந்தனர். சந்திப்கோல், ராம் பால் ஆதிவாசி சிகிச்சை பலனின்றி இறந்தனர். வினோத் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.