திருச்சி:மூன்று வயது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருச்சி, உறையூரைச் சேர்ந்தவர் துரை, 70. இவர், 2019ல், தன் பேத்தி முறையான, மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
குழந்தையின் பெற்றோர், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, துரையை போலீசார் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த, திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன், துரைக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.