சென்னை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

Added : ஜன 21, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-சென்னை மெரினா கடற்கரையில், குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும், குடியரசு தின விழா, சென்னை மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகே நடக்கும். தற்போது, அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், இந்த ஆண்டு முதல் முறையாக, மெரினா உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.விழா ஏற்பாடுகள் தீவிரமாக
chennai, republic day festival, சென்னை, குடியரசு தின விழா, ஏற்பாடுகள்

சென்னை-சென்னை மெரினா கடற்கரையில், குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும், குடியரசு தின விழா, சென்னை மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகே நடக்கும். தற்போது, அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், இந்த ஆண்டு முதல் முறையாக, மெரினா உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.

விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியில், மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதன் அருகில், பொதுமக்கள் சாலையை கடக்க அமைக்கப்பட்டு உள்ள சுரங்கப்பாதை மேலிருந்த, தடுப்பு சுவர் அகற்றப்பட்டு, அதன் மீது பார்வையாளர் கேலரி அமைக்கப்பட உள்ளது.

அண்ணாதுரை நினைவிடத்தை அடுத்து, கவர்னர், முதல்வர் வாகனம் திரும்ப வசதியாக, சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.

அணிவகுப்பில் இடம்பெற உள்ள அலங்கார ஊர்திகள் தயாரிப்பு பணியும் வேகமாக நடந்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் இல்லாததால், இம்முறை குடியரசு தின விழாவில், பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

நேற்று காலை, குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. முப்படை வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறை வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.

ஒத்திகையை ஒட்டி, நேற்று காலை அப்பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. நாளை இரண்டாவது ஒத்திகை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-ஜன-202310:18:50 IST Report Abuse
sankaranarayanan அணிவகுப்பில் இடம்பெற உள்ள அலங்கார ஊர்திகள் தயாரிப்பு என்ற உடனே திரும்பவும் சில சர்ச்சைகள் எழுகின்றன இந்திய நாடு சுதந்திரம் அடைய பாடு பட்ட தியாகம் செய்தவர்களில் சிலைகள் மட்டுந்தான் இந்த ஊர்திகளில் இடம் பெற வேண்டும் என்ற நிபந்தனை மீறப்படுமா? சுதந்திரமே வேண்டாம் என்றும் அந்நிய ஆதிக்கமே தொட ரட்டும் என்று கோஷமிட்ட பெரியவர்கள் சிலைகள் வைத்தால் திரும்பவும் சர்ச்சைகள் ஆரம்பமாகும்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-ஜன-202305:46:03 IST Report Abuse
NicoleThomsonஅடப்போங்க எப்படியோ கார்பொரேட் குடும்பம் ஆட்சியில் இருந்தா போதும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X