கோலத்தில் ஓவியமும் வரைய முடியும் என்பதை நிரூபித்து காட்டிய இளங்கலை பட்டதாரி மாணவர்.
உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் பிராமணஹள்ளியைச் சேர்ந்தவர் சந்தன் தேவடிகா, 22. சிறு வயது முதலே ஓவியம், ரங்கோலி வரைந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது பெங்களூரில் கர்நாடக சித்ரகலா பரிஷத்தில் 'விஷூவல் ஆர்ட்ஸ்' பிரிவில் இளங்கலை படித்து வருகிறார்.
அக்ரிலிக், ஆயில் பெயிண்டிங், ஸ்பீட் பெயிண்டிங், சுவரொட்டி ஓவியம், சாந்தனின் கையால் வரையப்பட்ட படங்கள் கண்ணைக் கவரும்.
சிறுவயதில் இருந்து ஓவியம் வரைந்து வந்தாலும், கோலத்தில் ஓவியம் வரைய வேண்டும் என ஆர்வம் அதிகரித்தது.
இதற்காக எதைச் சையாக ஒருமுறை கோலப்போட்டியில் தற்செயலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இது அவருக்கு உத்தேவகம் அளித்ததால், பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
எல்லா இடங்களிலும் புதிய விஷயங்களை கற்கும் இளைஞனான சாந்தன், பெரிய கலைஞர்களின் வீடியோக்களை யுடியூப்பில் பார்த்து இந்த நிலையை எட்டியுள்ளார்.
கார்வாரில் உள்ள மாருதி கள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ரங்கோலி கண்காட்சியில் சந்தன் ரங்கோலி படங்கள் பிரபலமாக உள்ளன.
மாநிலத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் மக்கள் வந்து ரங்கோலி படங்களைப் பார்த்து மகிழ்வது மட்டுமல்லாமல், புகைப்படங்களையும், செல்ஃபிக்களையும் 'கிளிக்' செய்கிறார்கள்.
சந்தன், கரி அல்லது கரி பொடியில் வரையப்பட்ட ரங்கோலி வீடியோக்களை பாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா, சோனு சூட் ஆகியோர், தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து சந்தனின் கலையை ஊக்கப்படுத்தினர்.
மொத்தத்தில், குழந்தை பருவ ஆர்வம், பொழுதுபோக்கு சாந்தனை ஒரு கலைஞனாக வடிவமைத்தது. இன்னும் இளமையாக இருக்கும் சாந்தன் இத்துறையில் மேலும் சாதிப்பார் என்று நம்புவோம்
- நமது நிருபர் -.