கும்மிடிப்பூண்டி,--கும்மிடிப்பூண்டி அடுத்த, சிறுபுழல்பேட்டை கிராமத்தில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிப்காட் போலீசார், அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 55 கிலோ எடை குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடை உரிமையாளர்களான, தண்டலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 50, நாகராஜன், 43, ஆகிய இருவரை, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.