தமிழர்கள் காதுகளில் பூச்சூடுகின்றனர்!

Updated : ஜன 22, 2023 | Added : ஜன 22, 2023 | கருத்துகள் (55) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...... .என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சமஸ்கிருதமானது, அந்தணர்களுக்கு மட்டுமே உரிய மொழி. அவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி' என்ற தவறான கருத்தை, திராவிட செம்மல்கள் இதுநாள் வரை பரப்பி வந்துள்ளனர். தமிழ் மொழி போல, சமஸ்கிருதமும் காலம் கடந்து நிற்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...... .


என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'சமஸ்கிருதமானது, அந்தணர்களுக்கு மட்டுமே உரிய மொழி. அவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி' என்ற தவறான கருத்தை, திராவிட செம்மல்கள் இதுநாள் வரை பரப்பி வந்துள்ளனர். தமிழ் மொழி போல, சமஸ்கிருதமும் காலம் கடந்து நிற்கும் தொன்மையான மொழி என்பதை, சுலபமாக மறந்து விட்டனர், இந்த அறிவுஜீவிகள்.



latest tamil news


ராமாயணத்தை, சமஸ்கிருத மொழியில் எழுதிய, வால்மீகி முனிவர் அந்தணர் அல்ல. இரண்டாம் சந்திரகுப்தர் என்ற, போஜராஜன் அவையில் இருந்த, மகாகவி காளிதாசர், பிறப்பால் ஆடுகள் மேய்க்கும், இடையர் குலத்தைச் சேர்ந்தவர்.

ஆனாலும், காளியின் அருளால் காவியங்கள் படைக்கும் திறமை பெற்று, சமஸ்கிருத மொழியில் நிறைய காவியங்கள் படைத்து, கவிச் சக்கரவர்த்தியானார்.

மகாபாரதம் என்ற புகழ் பெற்ற இதிகாசத்தை, சமஸ்கிருத மொழியில் படைத்த வியாசர், மீனவப் பெண்ணுக்கு மகனாகப் பிறந்தவர். காயத்ரி மந்திரம் சொன்ன, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் என்ற, அந்தணர் வாயால், 'பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றவர். சத்திரிய குலத்தில் அவதரித்த இவரும் அந்தணர் அல்ல.

ராமாயணத்தை எழுதி, 'கவிச்சக்கரவர்த்தி' என்று போற்றப்பட்ட கம்பர், சமஸ்கிருத மொழியை நன்கு கற்றதால் தான், சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை, தமிழில் மொழி பெயர்த்து, பெரிய சாதனை படைத்தார். தமிழை வளர்த்த அகத்தியரும், சமஸ்கிருத புலமை பெற்றிருந்ததால் தான், சூரியனை போற்றும், 'ஆதித்திய ஹிருதயம்' என்ற பாடலை பாடி, பெருமை அடைந்தார்.

இன்று, அந்தணர் குலத்தில் பிறக்காத மாணவர்கள் பலர், பள்ளிப் படிப்பில் இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம் கற்று, அதிக மதிப்பெண் பெறுகின்றனர். சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் சமஸ்கிருதத்தில் தானே இருக்கின்றன.


latest tamil news


நம் நாட்டின் தேசிய மொழியான, ஹிந்தி மொழியே சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானது தானே. இத்தனை சிறப்புக்கள் உள்ள சமஸ்கிருத மொழியை, 'தேவபாஷை, அந்தணர்களுக்கே உரிய மொழி' என்று, ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி, அதில் குளிர் காய நினைக்கின்றனர், திராவிட செம்மல்கள்.

அத்துடன், சாஸ்திரங்கள், வேதங்கள், சம்பிரதாயங்கள் எல்லாம், மூடநம்பிக்கைகள் என்றும் சொல்லி, அப்பாவி தமிழர்களின் காதுகளில் பூச்சூடுகின்றனர். சமஸ்கிருதத்தை ஆதரிக்கும் அந்தணர்கள், தமிழ் மொழியை வெறுப்பது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இதுவே, அந்தணர்களுக்கும், திராவிட செம்மல்களுக்கும் உள்ள வித்தியாசம்!

Advertisement




வாசகர் கருத்து (55)

Ram - Kovilpatti,இந்தியா
23-ஜன-202302:55:20 IST Report Abuse
Ram சமஸ்கிருதம் ஒரு காலத்தில் எல்லோராலும் பேசபட்ட மொழி ஒரு குறிப்பிட்ட நில மக்கள் பேசிய மொழி, காலப்போக்கில் அழிந்த மொழி. இதை தவிர சமஸ்கிருதம் பற்றி அறிந்து கொள்ள வேறு எதுவும் அவசியம் இல்லை.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
22-ஜன-202320:23:19 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy நாமக்கல் இன்று நடந்த பூமி பூஜையில் தி மு க காரர்கள் புரோகிதர்களை வைத்து பூமி பூஜை செய்தார்கள். அதில் ஓதப்பட்ட சம்ஸ்கிருத மந்திரங்களில் திராவிட மாடல் ஸ்வாகா , உதயநிதி ஸ்வாகா , எஜமானி யம்மா ஸ்வாகா என்றும் ஓதப்பட்டு சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்ப பட்டுவருகின்றது .. திராவிட செம்மல்கள் ஏன் சமஸ்கிருதத்தில் பூமி பூஜை செய்யவேண்டும் ?
Rate this:
Cancel
SivaKumar -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-202319:01:10 IST Report Abuse
SivaKumar வால்மீகி எழுதிய ராமாயணத்தில் தென்னகமும் இலங்கையும் கிடையாது. அதில் குறிப்பிடப்படும் அனைத்து இடங்களும் வடநாட்டிலேயே உள்ளன. லங்கா என்று குறிப்பிடப்படுவதும் மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு இடமே. கம்பர் ராமாயணம் எழுதியபோதே தென்நாட்டில் உள்ள இடங்கள், ராமேஸ்வரம் மற்றும் இலங்கை இணைக்கப்படுகிறது.சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ராமாயணம் உண்மை எனில் கம்பராமாயணம் புனைசுருட்டுதானே?
Rate this:
sridhar - Chennai,இந்தியா
22-ஜன-202319:20:52 IST Report Abuse
sridharஉத்ர பிரதேசத்துக்கு மதிய பிரதேசத்துக்கும் இடையே எந்த கடலை ஹனுமான் கடந்தார் , எப்படி வானரங்கள் பாலம் கட்டின. உங்க திராவிட புரட்டு எல்லாம் வேறு எங்காவது விடுங்க....
Rate this:
sR - ,
23-ஜன-202303:33:51 IST Report Abuse
sRநீங்கள் எப்பவாவது valmiki Ramayana படிச்சு இருக்கீங்களா? இல்லைன்னா இப்படி ellam ularakkoodathu...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X