ஏலகிரி மலையை ஏப்பம் விடும் வனத்துறை!
''இந்த போலீஸ்காரங்க நிலைமையை நினைச்சா பாவமா தான் இருக்கு வே...'' என்றபடியே, இஞ்சி டீயை பருகினார் அண்ணாச்சி.
''என்ன ஓய், அவா மேல திடீர் கரிசனம்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தமிழகத்துல, கான்ஸ்டபிள்களுக்கு வார விடுமுறை அளிக்கிற நடைமுறை, ஏற்கனவே அமல்ல இருக்கு... இப்ப, எஸ்.ஐ.,க்கள், சிறப்பு, எஸ்.ஐ.,க்களுக்கும், 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்க, போன ஆகஸ்ட் மாசம் அரசாணை போட்டாவ வே...
''ஆர்டர் வந்து ஆறு மாசம் ஆயிட்டு... ஆனா, இன்னும் வார விடுமுறை மட்டும் தர மாட்டேங்காவ... குடும்பத்தோட நேரம் செலவிட முடியாம, எஸ்.ஐ.,க்கள் மனம் நொந்து போய் கிடக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி - அழகிரி சந்திப்புக்கு அப்பறமா, மதுரை தி.மு.க.,வுல ஒரே சலசலப்பா இருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலை தட்டி விட்டார் குப்பண்ணா.
''அப்படியா... விபரமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மதுரையில, அழகிரியை அவரது ஆத்துக்கே போய் அமைச்சர் உதயநிதி சந்திச்சாரோல்லியோ... அப்ப, 'உங்களை திரும்ப தி.மு.க.,வுல சேர்த்துப்பாளா'ன்னு பத்திரிகைக்காரா கேட்டதுக்கு, 'அதை இவர்ட்ட கேட்கணும்'னு, பந்தை உதயநிதி பக்கம் அழகிரி தள்ளி விட்டார் ஓய்...
''அதுக்கு பதில் சொல்லாம, உதயநிதி குலுங்கி குலுங்கி ஒரு சிரிப்பு சிரிச்சாரோன்னோ... 'அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்'னு புரியாம கட்சிக்காரா பாயை பிராண்டறா ஓய்...
''மதுரையில அரசியல் செய்ய, இனி அழகிரியின் ஆதரவு தேவைப்படுமோன்னு கட்சிக்காராளுக்கு, 'டவுட்' வந்துடுத்து... அதனால, எதுக்கும் இருக்கட்டும்னு அவரின் ஆதரவாளர்கள்கிட்ட நெருக்கம் காட்ட துவங்கிட்டா ஓய்...
''தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அழகிரி ஆதர வாளர்கள், போன் போட்டு நேரடியா அழகிரிகிட்டயே பேச வச்சுட்டாளாம்... இந்த சந்தோஷத்தோட, வர்ற, 30ம் தேதி அழகிரி பிறந்த நாள் வரது... அதை தடபுடலா கொண்டாட, 'பிளான்' பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மலையை பாதுகாக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளே, அதை முழுங்கி ஏப்பம் விட்டுடுவாங்க போலிருக்குங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னையில இருந்து சில மணி நேரம் பயணம் செஞ்சா, ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலைக்கு போயிடலாமுங்க... வேலுாருக்கு அடுத்த திருப்பத்துார் மாவட்டத்துல இருக்கிற இந்த மலைப் பகுதி, வனத்துறையின் கட்டுப்பாட்டுல இருக்குதுங்க...
''இது மாதிரியான மலைப் பகுதியில, ஜே.சி.பி., கம்ப்ரசர் இயந்திரங்களை பயன்படுத்த தடை இருக்குதுங்க... யாராவது மீறி பயன்படுத்தினா, வனத்துறையினர் தான் நடவடிக்கை எடுக்கணும்...
''ஆனா, ஏலகிரி மலையில அனுமதி இல்லாம கட்டப்படுற, 'ரிசார்ட்'களுக்கு மலையை குடையவும், பாறைகளை உடைக்கவும் சக்தி வாய்ந்த இயந்திரங்களை பயன்படுத்துறாங்க... இதை தட்டிக் கேட்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் கண்டுக் காம இருக்காங்க...
''வனத்துறை அதிகாரி களுக்கு மாசம் ஆனா, சுளையா 'மாமூல்' போயிடு துங்க... பொதுமக்கள் புகார் செஞ்சாலும், மேல் அதிகாரிகளை, 'கரெக்ட்' செஞ்சிட்டு, உள்ளூர் அதிகாரிகள் ஆட்டம் போடுறாங்க... அரசு தலையிட்டா மட்டும் தான் மலையை காப்பாத்த முடியுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.