இளநீர் பண்ணை விலை ரூ.21| Ilanir farm price is Rs.21 | Dinamalar

இளநீர் பண்ணை விலை ரூ.21

Added : ஜன 23, 2023 | |
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இருந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், ஆந்திரா, மும்பை, வடமாநிலத்தில் சில பகுதிகளுக்கும் இளநீர் அனுப்பப்படுகிறது. இளநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து குறைந்து வருவதால், விலை அதிகரித்துள்ளது.இந்த வாரம், தரமான வீரிய ஒட்டு ரக

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இருந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், ஆந்திரா, மும்பை, வடமாநிலத்தில் சில பகுதிகளுக்கும் இளநீர் அனுப்பப்படுகிறது. இளநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து குறைந்து வருவதால், விலை அதிகரித்துள்ளது.

இந்த வாரம், தரமான வீரிய ஒட்டு ரக இளநீர் விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 21 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 7,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.

இத்தகவலை, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X