உடுமலை:உடுமலை ஏழுகுள பாசன திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கிராமங்களையொட்டி, இத்திட்ட குளங்கள் அமைந்துள்ளன.
தளி பேரூராட்சியை ஒட்டி, தினைக்குளம், பள்ளபாளையம் ஊராட்சி அருகில், செங்குளம், போடிபட்டி அருகே ஒட்டுக்குளம் என முக்கிய குளங்கள் அமைந்துள்ளன.
இவ்வாறு, கிராமத்தின் அருகிலுள்ள குளங்களில், அங்குள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.
செங்குளத்தில், பள்ளபாளையம், கிராமத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும், மேற்குப்பகுதியில் சேர்கிறது. அங்கிருந்து, செங்குளத்திற்கு, தண்ணீர் செல்லும் மழை நீர் வடிகாலில் இணைகிறது.
பல ஆண்டுகளாக கழிவு நீர், குளத்தில் கலப்பதால், மழைக்காலத்திலும், அணையிலிருந்து தண்ணீர் வரும் போதும், மழைக்காலத்திலும், குளத்து நீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதே போல், தினைக்குளம், ஒட்டுக்குளம், ஆகிய குளங்களிலும், அருகிலுள்ள கிராமங்களின் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.
கழிவு நீரை சுத்திகரித்தல் போன்ற பெரிய நிதி ஆதார திட்டங்களை ஊராட்சிகள் செயல்படுத்த வழியில்லை; எனவே, பொதுப்பணித்துறை, சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து, குளங்கள் பாதுகாப்புக்கான நடவடிக் கை எடுக்க வேண்டும்.