கோவை: கோவையில் ஆட்டோ டிரைவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் லோடு ஆட்டோ டிரைவர் ரவி,50. இவர், நேற்று ஆட்டோவில் மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், ரவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச்சென்றார். பலத்த காயமடைந்த ரவி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி, பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்த கூலித்தொழிலாளி பூபாலன்,40 என்பவரை கைது செய்தனர்.