வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அருகே முதல்வர் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள், குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசும் வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜனவரி 25ம் தேதியான நாளை மொழிப்போர் தியாகிகளுக்காக திருவள்ளூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர்., அருகில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அமர்வதற்கு இருக்கை எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி இருக்கையை மெதுவாகவும், ஒரு இருக்கை மட்டும் எடுத்து வந்துள்ளார்.
இதை கண்டதும் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசினார். இதனால் கட்சி நிர்வாகிகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.