வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி:பா.ஜ.,விற்கான தேர்தல் 2024லோக்சபா தேர்தல் தான். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அல்ல என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திருநெல்வேலி வந்தார். கட்சியினர் இல்ல விழாக்களில் பங்கேற்றார்.மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம்கூறியதாவது, சேது சமுத்திரதிட்டம் செயல்படுத்துவதற்கு குறித்து சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியதோடுசரி அதன் பிறகு தி.மு.க., அரசு எதுவும் பேசவில்லை கிடப்பில்போட்டுவிட்டனர். பெயருக்கு ஒருதிட்டத்தை கொண்டு வருகிறார்கள்.அது சாத்தியமில்லை என்றதும் அதை விட்டு அடுத்த விஷயத்திற்கு சென்று விடுகிறார்கள். எந்த திட்டத்தையும்தி.மு.க., தொடர் நடவடிக்கையாக செயல்படுத்துவதில்லை. ஈரோடுகிழக்கு இடைத்தேர்தல் இன்னும்வேட்பு மனுதாக்கல் துவங்கவில்லை.
அதற்குள் தி.மு.க.வினர் படை,பரிவாரங்களுடன் பிரசாரத்தை துவங்கி விட்டனர். இதன் மூலம்
தி.மு.க.,வின் தோல்வி பயம்தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் அம்மாவட்ட தலைவரே, வேட்பாளர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் பணியாற்றுவார்களா என்பதேசந்தேகம்தான். இதையெல்லாம்மறைக்க தி.மு.க., கபட நாடகம்போடுகிறார்கள்.
தி.மு.க.இந்த தேர்தலை பயத்தோடுஅணுகுகிறார்கள். திருநெல்வேலிமாவட்டத்தில் தொழிற்சாலைகளின்மூலம் நிறைய வேலை வாய்ப்புகளைஉருவாக்க வேண்டும் என்பது பா.ஜ.,வின் நிலைப்பாடு. பிரதமர்மோடி, 2023 டிசம்பருக்குள் மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு மத்தியஅரசில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும்எனக் கூறியிருந்தார். மூன்றுதவணைகளாக மத்திய அரசு2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்குவேலைவாய்ப்பு கடிதத்தைவழங்கியுள்ளது. வரும் டிச.31க்கு முன்பாகவே 10 லட்சம்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கப்படும்.
அந்தமான் நிகோபாஒட்டியுள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர்சக்ரா விருது பெற்றவர்களின்பெயர்கள் சூட்டப்பட உள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த பரம்வீர் சக்ரவிருது பெற்ற ராமசாமி பரமேஸ்வன் பெயர் ஒரு தீவுக்கு சூட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இத்தகையவிஷயங்களை வரவேற்றிருக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு பலம் வாய்ந்த கூட்டணிவேட்பாளராக அ.தி.மு.க.,வைசேர்ந்தவர் நிறுத்தப்படுவார்.அ.தி.மு.க.,வின் இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ்., இணைவது அந்த கட்சிதொண்டர்களின் முடிவாகும்.பா.ஜ.,விற்கான தேர்தல் 2024லோக்சபா தேர்தல் தான். இந்த இடைத்தேர்தல் அல்ல. மதுரையில்எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் செயல்பாட்டில் இருக்கும் எனமத்திய அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டுநிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கட்டுகிறோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு முந்தைய திட்டத்தை விட தற்போது பிரதமர் மோடி கூடுதலாக ஆடிட்டோரியம்,150 கூடுதல் படுக்கைகளுடன் அமைக்க கூறியுள்ளார். ரூ 1900 கோடி பட்ஜெட்டில் திட்டம் வர உள்ளது. கடந்த 20 மாதங்களில் தி.மு.க.,அமைச்சர்கள் சம்பாதித்த பணம் இந்த இடைத்தேர்தலில் வெளியேவரட்டும் என்றார்.