வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடியை விமர்சிக்கும் பி.பி.சி., ஆவணப்படத்தை டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட திட்டமிட்டுள்ள நிலையில், பல்கலை. முழுவதும் மின்சாரம், இணைய தளம் துண்டிக்கப்பட்டது. மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது
பிரிட்டனை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் 'இந்தியா மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், 2002ல் குஜராத்தில் உள்ளதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
![]()
|
இன்று (ஜன.24) டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) மாணவர்கள் அமைப்பு, பிபிசி ஆவணப்படத்தை இரவு 9 மணிக்கு திரையிட போவதாக அறிவித்தது. இதற்கு பல்கலை. நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் பல்கலை. வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பல்கலை. நிர்வாகம் , மின் விநியோகத்தையும், இணையதளத்தையும் துண்டித்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பல்கலை. வளாகம் முழுவதும் இருளில் மூழ்கின.எனினும் ஆவணப்படம் குறித்த க்யூஆர் கோடு மூலம் படத்தை மாணவர்கள் சிலர் மொபைலில் டவுன்லோடு செய்து பார்த்தனர். இதன் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் மொபைலில் படம் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கல்வீச்சு சம்பவம் நடக்கவில்லை என கூறினர். இதையடுத்து பல்கலை. இழுத்து மூடப்பட்டதாக கூறப்படுகிறது.