மாலை நேரத்தில் பஸ் வசதியின்றி அரசு பள்ளி மாணவர்கள் அவதி| Government school students suffer without bus facility in the evening | Dinamalar

மாலை நேரத்தில் பஸ் வசதியின்றி அரசு பள்ளி மாணவர்கள் அவதி

Added : ஜன 24, 2023 | |
விழுப்புரம் : புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாலை நேரத்தில் பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.வானுார் அடுத்த புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் கொடுத்துள்ள மனு:புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைகாணிகுப்பம், தேவனந்தல், வங்காரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள்



விழுப்புரம் : புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாலை நேரத்தில் பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

வானுார் அடுத்த புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் கொடுத்துள்ள மனு:

புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைகாணிகுப்பம், தேவனந்தல், வங்காரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். மாலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு மாலை 5:30 மணிக்கு விடப்படுகிறது.

அந்த நேரத்தில் பஸ் வசதியில்லாததால் 10 கி.மீ., துாரம் மாணவர்கள் நடந்தே வீட்டிற்கு செல்கின்றனர். இதனால் மாணவ, மாணவியர்கள்பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

மாணவர்களின் நலன் கருதி மாலையில் திண்டிவனம் - உப்புவேலுார் வழித்தடம் எண்.7 பஸ்சை மாலை 5:25 மணிக்கு வரும் நேரத்தினை 5:50 மணியாக மாற்றம் செய்யவும், உப்புவேலுார் வரை செல்லும் பஸ்சை தலைகாணிகுப்பம் வரை நீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X