கள்ளக்குறிச்சி : மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த எரவார் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது 23 வயது மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.