திருமங்கலம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி, 75. இவர், கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு செல்லும்போது 10 சவரன் தங்கச் செயினை, மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.
திருமங்கலம் போலீசாரின் விசாரணையில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது எலியாஸ், 56, என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரை கைது செய்து விசாரித்ததில், கடந்த செப்டம்பர் மாதம் அயனாவரத்தைச் சேர்ந்த குமார் என்பவரை கொலை செய்த வழக்கில், முகமது எலியாசின் மகன் முகமது பியாஸ், 25, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை ஜாமினில் வெளியில் எடுக்க போதிய பணம் இல்லாததால், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. செயினை பறிமுதல் செய்த போலீசார், முகமது எலியாசை சிறையில் அடைத்தனர்.