சிவகாசி:கனஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இறந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாயில்பட்டி அருகே கனஞ்சாம்பட்டி பட்டாசு ஆலையில் ஜன., 19ல் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தாயில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, 54, அமீர் பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, 26, உள்ளிட்டோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், ஜன., 21ல் இறந்தனர்.
இந்நிலையில், சிவகாசி, சுப்பிரமணியபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 38, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.