அரசு விதியை காற்றில் பறக்கவிட்ட நகராட்சி பள்ளிகள்

Added : ஜன 26, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் மயிலாடுதுறையில் நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன.பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கொடியேற்ற
Mayiladuthurai, 74th Republic Day, DMK, மயிலாடுதுறை, 74வது குடியரசு தினம், தேசியக்கொடி, திமுக, நகராட்சி பள்ளிகள்,  National Flag, Municipal Schools,

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் மயிலாடுதுறையில் நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன.

பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கொடியேற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் செல்வராஜ் என்பவருக்காக காலை முதலே பள்ளி மாணவ மாணவிகள் காக்க வைக்கப்பட்டனர்.


காலை ஏழு முப்பது மணிக்கு எல்லாம் பசியுடன் வந்திருந்த மாணவச் செல்வங்களை பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நிறைவு செய்து இறுதியாக நகராட்சி பள்ளிகளுக்கு நகர மன்ற தலைவர் வருகை புரிந்தார். பத்தரை மணிக்கு நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், 10. 50 மணிக்கு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மூன்று மணி நேரமாக காத்திருந்த மாணவச் செல்வங்கள் இதனால் சோர்வடைந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஜன-202306:09:24 IST Report Abuse
D.Ambujavalli கட்சிக்காரர் பள்ளி நிர்வாகம், மரபுகள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவரா? அவர் மாலை ஐந்து மணிக்கு ஆடி அசைந்து வந்தால் அதுவரை சிறு பிள்ளைகள் வெயிலில், பசி தாகத்தில் மயங்கி விழுந்தாலும் கவலையில்லையா ? குறித்த நேரத்தில் தலைமை ஆசிரியர் கொடியேற்ற வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் திராவிட மாடலில் நடக்குமா ?
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
26-ஜன-202318:38:49 IST Report Abuse
Dharmavaan இந்த கொடுங்கோல் ஆட்சி என்று ஒழியும்
Rate this:
Cancel
தமிழன் - Chennai,இந்தியா
26-ஜன-202316:53:25 IST Report Abuse
தமிழன் ஏழை குழந்தைகள் தானே காத்திருக்கட்டும் என்ற திராவிட திமிர் தான் இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X