டில்லி மேயர் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி முறையீடு

Updated : ஜன 26, 2023 | Added : ஜன 26, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்த வேண்டும். நியமன உறுப்பினர்களை ஓட்டுப்போட அனுமதிக்கக்கூடாது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்துள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் புதிய
Delhi, Mayor Polls, AAP, Supreme Court, டில்லி, மேயர் தேர்தல், உச்சநீதிமன்றம், ஆம் ஆத்மி, முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்த வேண்டும். நியமன உறுப்பினர்களை ஓட்டுப்போட அனுமதிக்கக்கூடாது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்துள்ளது.


சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது மாநகராட்சிக்கு 10 நியமன உறுப்பினர்களை டில்லி கவர்னர் சக்சேனா நியமித்தார்.


தொடர்ந்து பா.ஜ., கவுன்சிலர் சத்யா சர்மாவை, மேயர் தேர்தலை நடத்த, தற்காலிக அவை தலைவராகவும் கவர்னர் நியமித்தார். பிறகு டில்லி மாநகராட்சி அலுவலகத்தில் , பாஜ.,- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.


தொடர்ந்து, ஜன.,24 ல் மாநகராட்சி மீண்டும் கூடிய போது ஆம் ஆத்மி பாஜ., கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், அன்றைய தினம் நடைபெற இருந்த மேயர், துணை மேயர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.



latest tamil news

இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷெல்லி ஒபராய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: மேயர் தேர்தலை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்த வேண்டும். நியமன உறுப்பினர்களை ஓட்டுப்போட அனுமதிக்கக்கூடாது. இதற்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை (ஜன.,27) அன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

rama adhavan - chennai,இந்தியா
26-ஜன-202321:07:59 IST Report Abuse
rama adhavan SC will give directions to approach appropriate court.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
26-ஜன-202317:38:14 IST Report Abuse
GMM ஆம் ஆத்மி தேர்தல் ஆணையம் பதில் பெற வேண்டும். மேயர் பதவிக்கு மாவட்ட நீதிமன்றம் போதாதா.....உச்ச நீதிமன்றம் ஏன் செல்ல வேண்டும்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
26-ஜன-202317:18:08 IST Report Abuse
vnatarajan பிஜேபி க்கு நியமன உறுப்பினர்கள் பத்து பேரை சேர்த்தாலும் இன்னும் இருபது ஓட்டுக்கள் ஷார்ட்டெஜில்தானே பிஜேபி இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X