'ஆதார்' இணைக்க மறுத்தால் மின் கட்டணம் செலுத்த முடியாது!

Updated : ஜன 26, 2023 | Added : ஜன 26, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை:மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' இணைக்க வழங்கப்பட்ட அவகாசத்திற்கு, இன்னும் ஐந்து நாட்கள் மட்டும் உள்ளன. பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே, மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக மின் வாரியம் 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியை, 2022 நவ., 15ல் துவக்கியது. பலர், ஆதார் இணைக்க ஆர்வம் காட்டவில்லை. ஆதார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' இணைக்க வழங்கப்பட்ட அவகாசத்திற்கு, இன்னும் ஐந்து நாட்கள் மட்டும் உள்ளன. பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே, மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.



latest tamil news


தமிழக மின் வாரியம் 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியை, 2022 நவ., 15ல் துவக்கியது. பலர், ஆதார் இணைக்க ஆர்வம் காட்டவில்லை. ஆதார் இணைத்தால் தான் மின் கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டது.

இதனால், ஆதாரை இணைக்காததால் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து, ஆதார் இணைக்காமல் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆதார் இணைக்க, 2022 டிச., 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.


இதற்காக, 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. பின், அவகாசம் இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.நேற்று வரை, 2.20 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று, மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


latest tamil news

மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிவடைய, ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.இதனால் இம்மாதம் 31க்குள் ஆதார் இணைக்காமல் இருப்போர், பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என, மின் வாரியம் எச்சரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

chennai sivakumar - chennai,இந்தியா
27-ஜன-202308:12:14 IST Report Abuse
chennai sivakumar ஆதார் எண் இணைக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லையே.
Rate this:
Cancel
Varadarajan Nagarajan - Thanjavur,இந்தியா
27-ஜன-202307:09:30 IST Report Abuse
Varadarajan Nagarajan மின் வாரியத்தில் ஏதோ வீடுகளுக்கு உள்ள இந்த 100 யூனிட் இலவசம் மற்றும் விவசாய பம்புசெட் மின்சாரத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்படுவதுபோல் ஒரு தவறான கருத்தை மக்களிடையே பரப்புகின்றனர். இந்த இலவசங்கள் அரசின் கொள்கை முடிவே தவிர மின்வாரியத்தின் முடிவு அல்ல. அரசு கொடுக்கவேண்டிய மானியத்தை முறையாக கொடுத்ததும் வாரியத்தில் அடிக்கும் கொள்ளையையம் தடுத்தாள் வாரியம் ஒழுங்காக நடக்கும். 90 கலீல் லாபத்தில் இயங்கிய மின்வாரியம் எப்படி தற்போது நஷ்டத்தில் இயங்குகின்றது என்பதை தெரிந்துகொண்டால் அதை சரிசெய்யமுடியும். வாங்கும் நிலக்கரிமுதல் அணைத்து கொள்முதலில் கமிஷன் பிறகு வாரியம் ஏதோ இந்த விவசாய இலவசத்தால் மட்டுமே நஷ்டம் என்பதுபோல ஒரு பொய் பிரச்சாரம். அப்படி இதனால்தான் நஷ்டம் என்றால் பிறகு ஏன் 1,00,000 இலவச மின்னிணைப்பு கொடுத்தார்கள்
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
27-ஜன-202305:53:42 IST Report Abuse
Rajarajan இவற்றில் கோவில் போன்றவையும் வரும் என்பதால், முக்கிய கோவில்களுக்கும் இந்த மானியம் நேரிடையாக கொடுக்கப்பட வாய்ப்புண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X