கங்கை நதியின் சத்தம் பாரத்மாதா கி ஜெய் : ஸ்மிதிஇரானி

Updated : ஜன 26, 2023 | Added : ஜன 26, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: கங்கை நதியில் கரைக்கப்படும் இறந்தவரின் சாம்பல் எழுப்பும் ஒலி பாரத் மாதா கி ஜெய் ஆகும் என மத்திய அமைச்சர் ஸ்மிதிஇரானி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டின் 74 வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு தலைவர்களும் தங்களின் தனித்துவமான வழியில் வாழ்த்துக்களை அனுப்பி வைப்பது வழக்கம் அந்த வகையில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கங்கை நதியில் கரைக்கப்படும் இறந்தவரின் சாம்பல் எழுப்பும் ஒலி பாரத் மாதா கி ஜெய் ஆகும் என மத்திய அமைச்சர் ஸ்மிதிஇரானி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



latest tamil news


நாட்டின் 74 வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு தலைவர்களும் தங்களின் தனித்துவமான வழியில் வாழ்த்துக்களை அனுப்பி வைப்பது வழக்கம் அந்த வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிதி இரானியின் வாழ்த்து கூறிய வீடியோ அனைவரையும் கவர்ந்ததுடன் அவை சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகிறது.

அவர் வீடியோவில் பதிவிட்டு இருப்பதாவது: இந்தியா ஒரு துண்டு நிலம் அல்ல. இது வாழும் நாடு, வணக்கங்களின் நாடு, வாழ்த்துக்களின் நாடு, இது காணிக்கைகளின் நாடு, இது கடவுளின் நாடு என மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதாக இரானி கூறி உள்ளார்.


latest tamil news


அது மட்டுமல்லாது கங்கை நதி நமக்கானது. அதில் உள்ள ஒவ்வொரு கூழாங்கற்களும் நமக்கு சிவபெருமான். இந்தியாவுக்காக சாவோம். இறந்த பின்னரும் கங்கை நீரில் கரைக்கப்படுகிறது. அந்த நீரின் சத்தத்தை கேட்டால் ஒரே சத்தம் தான் வரும் அது பாரத் மாதா கி ஜெய் என் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
27-ஜன-202308:53:00 IST Report Abuse
பெரிய குத்தூசி இந்தியா, கடவுளால் அருளப்பட்ட நாடு, உலகை நடத்தும் பரமாத்மா சிவனே ஆட்சி நடத்தும் நாடு. இந்து மதம் யாரையும் அழிக்க நினைத்தது கிடையாது. இந்துமதத்தை அழிக்க நினைத்த அமைப்புகள் , சக்திகள் காணாமல் பொய் விட்டனர். திராவிட மாடலும் காணாமல் போகும், பொய்யை பிரதானமாக கொண்ட திருட்டு திமுகவும் காணாமல் போகும். பாரத் மாதக்கி ஜே. ஜைஹிந்த்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜன-202305:25:03 IST Report Abuse
g.s,rajan அவரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க .
Rate this:
RAMESH - chennai,இந்தியா
27-ஜன-202311:07:16 IST Report Abuse
RAMESHதிராவிடம் திராவிடம்னு சொல்லியிருந்தா சந்தோஷ பட்டு இருப்பியா , அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை , பாரத் மாதா கி ஜெய்னு சொன்னதை கூட உன்னால ஏத்துக்க முடியல .. நீ இருக்கறதே இந்த பூமிக்கு பாரம்தான் .......
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஜன-202305:19:35 IST Report Abuse
Kasimani Baskaran பல தெய்வீக இலக்கியங்களில் இமயமலைக்கு கீழே இருக்கும் பகுதியை புண்ணிய பூமி என்று வர்ணிக்கிறது. அங்கு ஒரு முறை பிறக்கவே முற்பிரவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X