திருப்பதியில் 'ஆட்டோமேஷன்' முறையில் லட்டு தயாரிப்பு

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
திருப்பதி: ''திருமலையில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது மற்றும் லட்டு தயாரிப்பை 'ஆட்டோமேஷன்' எனப்படும் தானியங்கி முறையில் நவீனமயமாக்குவது, இந்த ஆண்டின் முக்கிய இரட்டைத் திட்டங்கள்,'' என தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.நாட்டின், 74-வது குடியரசு தினத்தையொட்டி, நேற்று திருமலையில் உள்ள கோகுலம் இல்ல வளாகத்தில் தேசியக் கொடியை
Tirupati, Laddu, TTD, museum, automation, Lord Venkateswara temple

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

திருப்பதி: ''திருமலையில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது மற்றும் லட்டு தயாரிப்பை 'ஆட்டோமேஷன்' எனப்படும் தானியங்கி முறையில் நவீனமயமாக்குவது, இந்த ஆண்டின் முக்கிய இரட்டைத் திட்டங்கள்,'' என தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.

நாட்டின், 74-வது குடியரசு தினத்தையொட்டி, நேற்று திருமலையில் உள்ள கோகுலம் இல்ல வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின், செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:

திருமலையில், 4,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை, 120 கோடி ரூபாய் செலவில் அமைக்க 'டாடா' அறக்கட்டளை முன்வந்துள்ளது.

இதேபோல், 'ரிலையன்ஸ்' குழுமம், 50 கோடி ரூபாய் செலவில், தானியங்கி முறையில் லட்டுகளை தயாரித்து தர ஒப்புக்கொண்டுள்ளது.


latest tamil news


இது, லட்டுகளின் தரத்தையும், அளவையும் அதிகரிக்கும். இந்த இரண்டு திட்டங்களும் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். திருமலையில் தங்குமிடங்கள், 90 சதவீதம் புனரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் சில மாதங்களில் முடிக்கப்படும்.

இதற்காக, 230 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. அடுத்து, 100 கோடி ரூபாய் செலவில், பக்தர்களுக்கான இன்னொரு வளாகமும் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

duruvasar - indraprastham,இந்தியா
27-ஜன-202310:59:23 IST Report Abuse
duruvasar அப்பமும் ஒயினும் கொடுக்க ரோபோவை உபயோகித்தால் பாதிரியார்களுக்கு வேலை போய்விடும்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
27-ஜன-202312:27:35 IST Report Abuse
தமிழ்வேள்ரோபோவுக்கு எப்படி பாவமன்னிப்பு கொடுப்பான் பாதிரி ? ரோபோ பாவமன்னிப்பு தரும் தொழிலில் இறங்கினால் , பாதிரி , பிஷப் என்று எவனுக்கும் வேலை இல்லை .....வெறுமனே பைபிளை படித்துக்கொண்டிருந்தால் எப்படி ? ஹி ஹி ..ஹி ....
Rate this:
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
27-ஜன-202306:58:12 IST Report Abuse
Indhiyan லட்டில் ஏலாக்காயை தோலோடு போடுகிறார்கள். அதனை கடித்து முழுங்க முடியாது. அவனவன் ரோட்டிலும் பிற இடங்களிலும் தூ என்று தோலை துப்பி விட்டு போகிறார்கள். குழந்தைகளுக்கு கொடுத்தால் கேட்கவே வேண்டாம். தயவு செய்து தோல் இல்லாமல் ஏல விதையை மட்டும் பயன் படுத்துங்கள் அல்லது தோலை பவுடர் செய்து சேர்க்கலாம். திருமலை அதிகாரிகளை யாருக்காவது தெரிந்தால் அவர்களது கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜன-202305:22:38 IST Report Abuse
g.s,rajan லட்டுகளை விற்பனை செய்ய ரோபோக்களை ஈடுபடுத்தலாமே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X