Liquor shop closing on 30? Tamil Nadu Govt. Consideration | 30ல் மது கடை மூடல்? தமிழக அரசு பரிசீலனை| Dinamalar

30ல் மது கடை மூடல்? தமிழக அரசு பரிசீலனை

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (10) | |
சென்னை: காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு வரும், 30ம் தேதி, 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மது கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மே தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை.அதன்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இம்மாதம், 16ம் தேதியும்,
Liquor shop closing on 30? Tamil Nadu Govt. Consideration   30ல் மது கடை மூடல்? தமிழக அரசு பரிசீலனை

சென்னை: காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு வரும், 30ம் தேதி, 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மது கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மே தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை.

அதன்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இம்மாதம், 16ம் தேதியும், குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்றும் மது கடைகள் செயல்படவில்லை.


latest tamil news

வரும், 30ம் தேதி காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று, மது கடைகளை மூட வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அன்று மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கலாமா என, அரசு ஆலோசித்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X