வாக்காளர்களை கழகங்கள் 'கவனித்தால்' 100% கூட ஓட்டுப்பதிவு ஆகும்!

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
தமிழக கவர்னர் ரவி: ஜனநாயக நடைமுறைகளின் ஆணி வேராக இருக்கும் தேர்தல் மற்றும் வாக்காளர்களின் ஓட்டுப்பதிவு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். தமிழகத்தில், 70 சதவீதமாக உள்ள ஓட்டுப்பதிவு, 90 சதவீதம் என்ற நிலையை எட்ட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக, நம் மாநிலத்தின் ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்ய, அனைவரும்
election, vote, RN Ravi, Governor, கவர்னர், ரவி, ஓட்டுப்பதிவு

தமிழக கவர்னர் ரவி: ஜனநாயக நடைமுறைகளின் ஆணி வேராக இருக்கும் தேர்தல் மற்றும் வாக்காளர்களின் ஓட்டுப்பதிவு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். தமிழகத்தில், 70 சதவீதமாக உள்ள ஓட்டுப்பதிவு, 90 சதவீதம் என்ற நிலையை எட்ட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக, நம் மாநிலத்தின் ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்ய, அனைவரும் பொறுப்புணர்வுடன் ஓட்டளிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்ல, வாக்காளர்களை கழகங்கள் கவனிக்கிற கவனிப்புல, கவர்னரின் வேண்டுகோளான, 90 சதவீதம் என்ன, 100 சதவீதம் கூட ஓட்டுப்பதிவு ஆனாலும், 'டவுட்'டுக்கு இடமில்லாம ஏத்துக்கணும்!


***


பத்திரிகை செய்தி: 2021ல் வெளியான, புஷ்பா படம் பாணியில், ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில்நுாதன முறையில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.


latest tamil news

டவுட் தனபாலு: இப்ப வர்ற சினிமாக்கள் எல்லாம், பேங்க்ல எப்படி கொள்ளை அடிக்கிறது, கஞ்சாவை எப்படி கமுக்கமா கடத்துறது என, சமூக விரோத செயல்களைத் தான், கற்று தருகின்றன... இன்றைய திரையுலகினர், கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டாலே, நாட்டில் பாதி குற்றங்கள் குறையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


***


முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: முதல்வர் ஸ்டாலின் பொதுக்கூட்ட பணிகளை, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து, தான் அமைச்சர் என்பதையும் மறந்து, ரவுடி போல கல் வீச்சில் ஈடுபட்டு உள்ளார்; அவரது செயல் கண்டிக்கத்தக்கது.


டவுட் தனபாலு: அமைச்சரின் செயலை யாருமே நியாயப்படுத்த முடியாது... அதே நேரம், முதல்வர் பதவியை அலங்கரித்த உங்களது தலைமையில, குண்டர்கள் அ.தி.மு.க., தலைமை அலுவலக கதவை காலால் எட்டி உதைச்சு, சூறையாடிய சம்பவமும், 'டவுட்' இல்லாம தண்டிக்கப்பட வேண்டியது தான்!

Advertisement




வாசகர் கருத்து (2)

Narayanan - chennai,இந்தியா
27-ஜன-202315:06:00 IST Report Abuse
Narayanan நூற்றுக்கு நூற்று முப்பது வாங்கிவிடுவார்கள் ஆட்சியாளர்கள் . உண்மையில் ஈரோட்டு மக்கள் மனசாட்சிப்படி நடந்தால் மட்டுமே திராவிட காட்சிகளை தூக்கி எறியமுடியும் . செய்வீர்களா ??
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஜன-202305:13:32 IST Report Abuse
Kasimani Baskaran ஜனநாயக உரிமைகளை தியாகம் செய்வதாக நினைத்துக்கொண்டு விற்போரின் வாக்குரிமை நிரந்தரமாக பறிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X