'தி.மு.க.,வின் பகல் வேஷம் கலைகிறது'

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: 'பெயரளவுக்கு சமூக நீதி பேசி, நடைமுறையில் அதை காற்றில் பறக்கவிடும் தி.மு.க.,வின் பகல் வேஷம், தொடர்ந்து கலைந்து வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:அதிகார போதையில், ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய தி.மு.க., ஆட்சியில், பட்டியலின ஊராட்சி தலைவர்களான சகோதர, சகோதரிகளை, தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுக்கும் அவலம் அடிக்கடி
Annamalai, BJP, DMK, Mk Stalin, பாஜ, அண்ணாமலை, திமுக, ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை: 'பெயரளவுக்கு சமூக நீதி பேசி, நடைமுறையில் அதை காற்றில் பறக்கவிடும் தி.மு.க.,வின் பகல் வேஷம், தொடர்ந்து கலைந்து வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:


அதிகார போதையில், ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய தி.மு.க., ஆட்சியில், பட்டியலின ஊராட்சி தலைவர்களான சகோதர, சகோதரிகளை, தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுக்கும் அவலம் அடிக்கடி நடக்கிறது. அவர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் திருப்புக்குழி ஊராட்சி தலைவர் சுகுணா தேவேந்திரனை, தி.மு.க., நிர்வாகி ஒருவர் துாண்டுதலில், குடியரசு தினத்திற்கு தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரையும் கொடியேற்ற விடாமல் தடுத்து, தமிழக பா.ஜ., தலையிட்டதால் கொடியேற்ற அனுமதித்தனர்.


latest tamil news

இதுபோன்ற பல சம்பவங்கள் தமிழகம் முழுதும் நடக்கின்றன. பெயரளவுக்கு சமூக நீதி பேசி, நடைமுறையில் அதை காற்றில் பறக்கவிடும் தி.மு.க.,வின் பகல் வேஷம் தொடர்ந்து கலைந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு எதிரான சம்பவத்தில், தி.மு.க., அரசு, குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல், வேடிக்கை பார்த்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க, இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

தொடரும் பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்களை, கண்டும் காணாமல் இருக்கும் முதல்வர் ஸ்டாலினின் மவுனம், அவலத்தின் உச்சம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-ஜன-202309:52:38 IST Report Abuse
DARMHAR தி மு க என்பது திருடர்கள் முன்னேற்ற கழகம் என்று சிலர் கூறுவதுண்டு.
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜன-202316:59:02 IST Report Abuse
krishna IDHU PATHI ELLAM NAMMA THIRUTTU THIYAMUKKA NADHAS THAVIL OTTUNN8 KURUMA VAAYE THIRAKKA MAATAAR.ADHU SARI AVARUKKE UKKARA UDAINDHA PLASTIC CHAIR THIYAMUKKA KODUKKIRAARGAL.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-ஜன-202313:44:05 IST Report Abuse
duruvasar திமுகவின் இந்த இரட்டை வேஷம் என்பது அவர்களுடைய டி என் எ வில் உள்ள அம்சம் . திமுக தோன்றிய வரலாறை படித்தாலே இது புரியும் . திமுகவும் இரட்டை வேஷமும் ஒட்டி பிறநத இரட்டை குழந்தைகள் . பொதுவாகவே திமுகவினருக்கு ஒன்றுக்கு மேற்பட்டதில்தான் எப்பொழுதும் நாட்டம் இருக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X