''சங்கம் பெயரை கேட்டாலே, பயந்து நடுங்குறாங்க ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார், குப்பண்ணா.
''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சென்னை, பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலக பெண் நிர்வாகியைத் தான் சொல்றேன்... பி.எஸ்.என்.எல்.,லுக்கு சொந்தமான கேபிள்கள் அடிக்கடி திருடு போறது... இதனால, வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைக்காம சிரமப்படறா...
''சமீபத்துல, திருவான்மியூர், பூக்கடை பகுதிகள்ல கேபிள்களை திருடியதா, ஆறு ஊழியர்களை, 'சஸ்பெண்ட்' செய்தா... 'இவா மேல நடவடிக்கை எடுக்கப்டாது'ன்னு, ஊழியர் சங்க பிரதிநிதிகள், பெண் அதிகாரியை பார்த்து வலியுறுத்தியிருக்கா ஓய்...
''இதனால, கேபிள் திருட்டு பத்தி போலீஸ்ல குடுத்த புகாரை கிடப்புல போட்டுட்டு, ஊழியர்களை மறுபடியும் பணியில சேர்த்துண்டுட்டா...
![]()
|
''மற்ற அதிகாரிகள், பொதுமக்கள் யாரையும் சந்திக்க மறுக்கும் பெண் அதிகாரி, ஊழியர் சங்க நிர்வாகிகள் வந்தா, பயந்து போய் உடனே அவாளை பார்த்து, அவா கோரிக்கையை நிறைவேற்றி வச்சுடறாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''பூங்கொடி, உங்கப்பா ஊருல இருந்து வந்துட்டாரா தாயி...'' என, தெருவில் சென்ற சிறுமியிடம் அண்ணாச்சி விசாரிக்க, நண்பர்கள் நடையை கட்டினர்.