நாட்டின் மிக பழமையான வழக்கு 72 ஆண்டுகளுக்கு பின் முடித்து வைப்பு

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (29) | |
Advertisement
கோல்கட்டா: கடந்த 72 ஆண்டுகளாக முடித்து வைக்கப்படாமல் நீண்டு கொண்டே இருந்த, நாட்டின் மிக பழமையான வழக்கு விசாரணை, கோல்கட்டா நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது.மேற்கு வங்கத்தில் கோல்கட்டாவைச் சேர்ந்த, பெர்ஹாம்பூர் வங்கி திவாலானதை தொடர்ந்து, அந்த வங்கியை கலைக்க, 1948 நவ., 19ல் கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, 1951, ஜன., 1ல் உயர் நீதிமன்றத்தில் மனு
Kolkata High Court, Prakash Srivastava, West Bengal, கோல்கட்டா,  பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, மேற்கு வங்கம், Kolkata, கோல்கட்டா உயர் நீதிமன்றம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: கடந்த 72 ஆண்டுகளாக முடித்து வைக்கப்படாமல் நீண்டு கொண்டே இருந்த, நாட்டின் மிக பழமையான வழக்கு விசாரணை, கோல்கட்டா நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது.

மேற்கு வங்கத்தில் கோல்கட்டாவைச் சேர்ந்த, பெர்ஹாம்பூர் வங்கி திவாலானதை தொடர்ந்து, அந்த வங்கியை கலைக்க, 1948 நவ., 19ல் கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, 1951, ஜன., 1ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படாமல், கடந்த 72 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பிறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் பதிவான இந்த வழக்கு, தற்போது வரை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருந்தது.

வங்கி கலைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஆண்டு செப்., மாதம் இருமுறை விசாரணைக்கு வந்தது. அப்போது யாருமே வழக்கில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு குறித்து அறிக்கை அளிக்குமாறு, வங்கி கலைப்பு அதிகாரிக்கு நீதிபதி ரவி கிருஷ்ண கபூர் உத்தரவிட்டார்.


latest tamil news

அப்போது இந்த வழக்கு 2006 ஆக., மாதமே முடித்து வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான விபரங்கள் ஆவணங்களில் பதிவாகவில்லை என்ற தகவலும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, 72 ஆண்டுகளாக முடித்துவைக்கப்படாமல் நீண்டு கொண்டே சென்ற நாட்டின் மிக பழமையான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

நாட்டின் மிக பழமையான மேலும் நான்கு வழக்குகளில் இரண்டு வழக்குகள் கோல்கட்டா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-ஜன-202306:04:37 IST Report Abuse
NicoleThomson இது போன்று இழுத்தடிப்பதற்கு தான் நீதிபதிகளுக்கு எல்லாம் இலவசம் . இந்த இலவச கோட்டங்களை கலைக்கும்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
27-ஜன-202320:50:38 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இதனாலதான் ஈரவெங்காயம் சுதந்திரம் வேணாம்ன்னு சொல்லியிருப்பாரோ ????
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
27-ஜன-202319:38:35 IST Report Abuse
V.B.RAM சரி சரி ஜல்லிக்கட்டு வலக்கை நடத்துங்கள் மிக மிக முக்கியமான வழக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X