கொள்ளிடம் அருகே அரசு பள்ளியில் இரவு முழுவதும் பறந்த தேசியக்கொடி

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று தேசியக்கொடி அரசு விதிமுறைகளுடன் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்குள்ளாக இறக்கப்பட்டது. ஆனால் கொள்ளிடம் அருகே மாதாளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல
nationalflag, school, government school, தேசியக்கொடி, அரசுப்பள்ளி, கொள்ளிடம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று தேசியக்கொடி அரசு விதிமுறைகளுடன் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்குள்ளாக இறக்கப்பட்டது.


ஆனால் கொள்ளிடம் அருகே மாதாளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் நேற்று காலை குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்குள் கொடி இறக்கவில்லை. தொடர்ந்து இரவு முழுவதும் பறந்து கொண்டே இருந்தது. இன்று காலை வரை தேசியக்கொடி இறக்கவில்லை.


பொதுவாக அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழா ஆகிய நாட்களில் காலை 7:30 மணி முதல் ஏற்றி பிறகு ஆறு மணிக்குள் இறக்கி விட வேண்டும் என்று விதி கூறுகிறது. சூரியன் உதித்த உடன் தேசியக்கொடியை ஏற்றுவதும் மாலை ஆறு மணிக்குள் தேசிய கொடியை இறக்குவதும் விதியாக இருந்து வருகிறது. ஆனால் விதிக்கு புறம்பாக மாதானம் ஆதிதிராவிடர் நல பள்ளியில் நேற்று மாலை 6 மணிக்கு தேசய கொடியை இறக்காமல் இரவு முழுவதும் பறக்க விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

THANARAJ ABRAHAM - delhi,இந்தியா
28-ஜன-202309:43:25 IST Report Abuse
THANARAJ ABRAHAM டில்லியில் அநேக வீடுகளில் 24×7 பறந்து கொண்டுதான் இருக்கிறது.
Rate this:
Cancel
Naresh -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜன-202323:00:30 IST Report Abuse
Naresh ஒரு ஆதிதிராவிட நல அரசு தொடக்கப்பள்ளியில் தேசியக்கொடி பறந்து கொண்டிருப்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான் எத்தனையோ ரயில் நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் விமான நிலையத்திலும் 24 மணி நேரமும் கொடிகள் பறந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு அரசு பள்ளியில் 24 மணி நேரத்திற்கு மேல் கொடி பறந்ததில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-ஜன-202317:04:12 IST Report Abuse
NicoleThomson அது மாதானம் எனப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X