எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்பு

Updated : ஜன 27, 2023 | Added : ஜன 27, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
நாகப்பட்டினம்: பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று(ஜன.,27) கோலாகலமாக நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.நாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 20 ம் தேதி விக்னேஸ்வர
கும்பாபிஷேகம், துர்கா, துர்காஸ்டாலின், எட்டுக்குடி முருகன் கோவில்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


நாகப்பட்டினம்: பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று(ஜன.,27) கோலாகலமாக நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


latest tamil news



நாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 20 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள இடும்பன் கடம்பன் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.


latest tamil news



இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் குடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலில் உள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


latest tamil news



மஹா கும்பாபிஷேக விழாவில், ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Rajarajan - Thanjavur,இந்தியா
28-ஜன-202310:38:38 IST Report Abuse
Rajarajan இதற்க்கு மானஸ்தனும், அவரது தங்கச்சி அழகுமணியும் என்ன பதில் சொல்ல போகிறார்கள்
Rate this:
Cancel
Pandi Muni - Johur,மலேஷியா
27-ஜன-202322:37:29 IST Report Abuse
Pandi Muni திருக்குவளை பக்கமாத்தான் இருக்கு எட்டுக்குடி. திருக்குவளை கோயில்லதான் கருணாநிதியின் வந்தேறி தந்தை தவில் வாசிக்க வந்தவர். இன்று கோடிகளில் புரளும் கொள்ளை கூட்டம்.
Rate this:
Cancel
27-ஜன-202321:51:09 IST Report Abuse
N SASIKUMAR YADHAV ஆஸ்கருக்கேற்ற நடிப்பு . உலகத்தில் நடிப்புக்காக என்னென்ன விருதுகள் இருக்கிறதோ அத்தனையும் பெறுவதற்கு தகுதியான குடும்பம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X