தொங்கு பால விபத்து குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஜன 27, 2023 | Added : ஜன 27, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
ஆமதாபாத் :குஜராத் தொங்கு பால விபத்து தொடர்பான வழக்கில், சிறப்பு விசாரணை குழு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தொங்கு பாலத்தை பராமரித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலின் பெயர் பிரதான குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது. குஜராத்தில் மோர்பி நகரின் மச்சுச்சூ ஆற்றின் மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் இருந்தது. இது,
தொங்கு பாலம் , விபத்து  குற்றப்பத்திரிகை  ,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத் :குஜராத் தொங்கு பால விபத்து தொடர்பான வழக்கில், சிறப்பு விசாரணை குழு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தொங்கு பாலத்தை பராமரித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலின் பெயர் பிரதான குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது.

குஜராத்தில் மோர்பி நகரின் மச்சுச்சூ ஆற்றின் மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்., 30ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.


latest tamil news

இது குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த பாலத்தை இயக்கி பராமரித்து வந்த, 'ஒரேவா' குழுமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். ஒரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேல் தலைமறைவாக உள்ளார்.

விபத்து நடந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், சிறப்பு விசாரணைக்குழு சார்பில், நீதிமன்றத்தில் 1,262 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இதில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேருடன், ஜெய்சுக் படேல் பெயரும் பிரதான குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது. 'பாலத்தை பராமரிப்பதிலும், இதில் ஒரே நேரத்தில் எத்தனை பேரை அனுமதிப்பது என்பதை முடிவு செய்வதிலும், ஒரேவா நிறுவனம் கவனக் குறைவாக செயல்பட்டது; இந்த விபத்து நடந்ததற்கு அந்த நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்' என, குற்றப்பத்திரிகையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-ஜன-202300:08:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குஜராத் முதல்வர்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை.. செஞ்ச பாவங்கள் அப்படி.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-ஜன-202300:01:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆகவே, பாஜாக்கா அரசுக்கும் இந்த ஒப்பந்தத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பளிக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X