புகையிலை பொருட்கள் மீதான தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு: அமைச்சர்

Updated : ஜன 27, 2023 | Added : ஜன 27, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: தமிழ்நாட்டில் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை

சென்னை: குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.



latest tamil news


இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: தமிழ்நாட்டில் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையரால் ஆண்டு தோறும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த வழக்குகளை விசாரித்து வரும் உத்தரவை சென்னை ஐகோர்ட் புகையிலை பொருட்கள் மீதான விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில் முழு தடை விதிக்க வழிவகை செய்யவில்லை என தெரிவித்து உள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை தற்போது ரத்து செய்துள்ளது.


latest tamil news


அதே நேரத்தில் நாடு முழுவதும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு ஆணையர்கள் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். எனவே சுப்ரீம் கோர்ட சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அரசு ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடி வு செய்துள்ளது. மேலும் தடையை தொடர்ந்து உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம் மற்றும் விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

duruvasar - indraprastham,இந்தியா
28-ஜன-202311:12:50 IST Report Abuse
duruvasar இன்றைய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அன்றே சட்டசபைக்கு சட்டை பாக்கெட்டில் குட்டிகாவுடன் சென்றதால் முதல்வர் விருப்பத்திற்கு எதிராக தீர்ப்பு கொடுக்கவேண்டாம் என நீதியரசர்கள் நினைத்திருக்கலாம் . சட்டம் என்ன சொல்லுகிரது என்ற அடிப்படை அறிவு இல்லாமல் சட்டசபையில் தீர்மானம் போடுவது , ஆணை பிறப்பிப்பது என்று ஊரை ஏமாற்றும் வேலைகளுக்கு கொடுத்த சவுக்கு அடி .இப்போ புரியுதுங்களா ரம்மி ஆட்ட தடைக்கு ஏன் ஆளுநர் கையெழுத்து போடுவதற்கு தாமதம் செய்கிறார்
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
28-ஜன-202310:56:53 IST Report Abuse
ram சும்மா விளம்பரம், கூடிய விரைவில் எல்லா கடைகளிலும் விற்பதற்க்கு ஏற்பாடு செய்யப்படும் இந்த தீர்ப்பின் மூலம், இதுவும் திருச்சபை கழகத்தின் ஏற்பாடுதான்.
Rate this:
Cancel
28-ஜன-202309:42:48 IST Report Abuse
அப்புசாமி கொஞ்சம் உதார் உட்டு பாத்துட்டு அடங்கிடுவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X